பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வெந்தயக் கீரையில் இவ்வளவு நன்மைகளா!

கொத்துமல்லி விதைகளை ( தனியா) ஊற வைத்த நீர் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின்  அளவை  கட்டுப்படுத்தும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:04 pm IST

தனியா

கொத்துமல்லி விதைகளை ( தனியா) ஊற வைத்த நீர் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின்  அளவை  கட்டுப்படுத்தும்.  சர்க்கரை  நோய்  உள்ளவர்கள்  இந்த தண்ணீரை  தினமும்  குடிக்கலாம்.

வெள்ளைப் படுதல் பிரச்னையில் அவதிப்படும் பெண்கள், கொத்துமல்லி விதைகளை ஊற வைத்த, நீரை வாரத்தில் இரண்டு  முறை குடித்து  வருவது நல்லது.

கொத்துமல்லி  விதைகளை நீரில்  போட்டு  கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேன் கலந்து  குடித்து வந்தால்  ரத்தசோகை பிரச்னையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

வெந்தயக்கீரை

உடல் சூடு  உள்ளவர்கள்  வெந்தயக்கீரையை  சாப்பிட வேண்டும்.  இதன் குளிர்ச்சி  உடல்  சூட்டை  குறைத்து   உடலில் குளிர்ச்சியை  உண்டாக்கும்.

கபம்,  சளி  உள்ளவர்கள்   வெந்தயக்கீரையை  தொடர்ந்து சாப்பிட்டால் குணமடைவர்.

வெந்தயக்கீரையை தினந்தோறும்  உணவில்  சேர்ப்பதால் உடலில்  ஏற்படும் புரத குறைபாட்டை நீக்கி  உடலுக்கு  வலிமை  சேர்க்கும். மேலும்  கண் பார்வை குறைபாடு நோய்கள்  இருப்பவர்கள்  வெந்தயக்கீரையை  தொடர்ந்து சாப்பிட்டால்  கண் பார்வை  அதிகரிக்கும்.

வெந்தயக்கீரை  நரம்பு  தளர்ச்சியிலிருந்து  மீண்டு  வர உதவும்.

-  தி.பிரேமா, திருச்சி

ஆரஞ்சு

ஆரஞ்சுப் பழத்தை  சாப்பிட்டதும்  அது உடனடியாக ரத்தத்தினால் உறிஞ்சப்படுகிறது.  அதனால்  உடனடியாக  உடலுக்குத் தேவையான  சக்தி கிடைத்து விடுகிறது.

இரவில்  தூக்கமில்லாமல்  அவதிப்படுபவர்கள்  தூங்கப் போகும்முன் ஆரஞ்சு சுளைகளை   சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் கால்சியத்தால்  நன்கு தூக்கம் வரும்.

ஒரு ஆரஞ்சுப் பழம்  1 கப் பாலுக்கு இணையானது.  இந்தப் பழத்தை அப்படியே  சாப்பிடும்போது  அதில் உள்ள நார்ச்சத்து  முழுமையாக நமக்கு கிடைக்கும்.

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில்  ஒரு ஆரஞ்சுப் பழத்தையும், இரவு படுக்குமுன்  ஒரு பழத்தையும்  சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.

சாப்பாட்டிற்கு பிறகு ஆரஞ்சு சுளைகளை சாப்பிட்டால் விரைவில் ஜீரணமாகும்.

இதய நோய் உள்ளவர்கள்,  ஆரஞ்சு பழங்களை சாறாகப் பருகும்போது விரைவில்  அதிலுள்ள சத்துகள் உடலுக்குப் போய்ச் சேரும்.

- சி.ஆர்.ஹரிஹரன், கொச்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.