புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஹைபர் ஆக்டிவ் குழந்தைகளுக்கான ஆரோக்கிய டிப்ஸ்

பெருங்காயம், மஞ்சள், உப்பு இவைகளைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் நல்லெண்ணெய் விட்டு வதக்கி

News image
Updated On :9 மே 2019, 12:26 pm IST


வல்லாரைக் கீரைத் துவையல்

தேவையான பொருட்கள்

வல்லாரைக் கீரை - 100 கிராம்
மிளகு - 10 கிராம்
சின்ன வெங்காயம் - ஒன்று
பூண்டு - 5 பல்
பெருங்காயம் - இரண்டு சிட்டிகை
மஞ்சள் - 5 சிட்டிகை
உப்பு, நல்லெண்ணெய் - (தேவையான அளவு)

செய்முறை : பெருங்காயம், மஞ்சள், உப்பு இவைகளைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் நல்லெண்ணெய் விட்டு வதக்கி அவற்றுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து அரைத்து துவையலாக்கி கொள்ளவும். 

பலன்கள் : இந்த துவையலை வாரம் மூன்று முறையாவது வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் மூளைத் திறன் அதிகரிக்கும். மேலும் சில குழந்தைகள் அதிக சுறுசுறுப்பாக (Hyper Active)இருப்பார்கள். இவர்களை தொடர்ந்து ஒர் இடத்தில் பிடித்து வைக்க முடியாது. எதையாவது தேவையில்லாமல் பேசுவது , கோபப்படுவது, சண்டையிடுவது, காரணமின்றி அழுவது, நினைவாற்றல் குறைவது என இருப்பார்கள். இத்தகைய குழந்தைகளுக்கு வல்லாரைத் துவையல் மிகச் சிறந்த வரப்பிரசாதமாகும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.