‘காணாமல் பூப் பூக்கும் கண்டு காய் காய்க்கும்’ அது என்ன? இந்த விடுகதைக்கு விடை தெரிவதற்கு முதலில் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள்.
அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள்
அத்திப்பழத்தில் புரோட்டீன், கார்போ ஹைட்ரேட், கால்ஷியம், ஃபைபர், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, பி 12 உள்ளது.இதில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Antioxidents உள்ளன.பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
அத்திப் பழத்தின் நன்மைகள்
அத்தி மரம் இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகிய அனைத்துமே பலன்களைத் தரும்.
அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Anti Oxidants உள்ளன. அத்திப் பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும்.
உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, உடலுக்குச் சுறுசுறுப்புத் தரும்
விடுகதைக்கான விடை 'அத்தி’ என இப்போது தெரிந்துவிட்டது தானே! அத்திப் பூ நம் கண்களுக்கு புலப்படுவதில்லை. காரணம் அது அடிமரத்திலிருந்து உச்சி வரை மரத்தை ஒட்டியே இருக்கும். அதனால் தான் ‘காணாமல் பூப் பூக்கும் கண்டு காய் காய்க்கும்’ என்ற விடுகதை போட்டு மகிழ்ந்தனர் நம் முன்னோர்கள்.