தீராத மலச்சிக்கலைத் தீர்க்கும் வழி

முதலில் முளைக்கீரையை அலசி ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்
தீராத மலச்சிக்கலைத் தீர்க்கும் வழி
Updated on
1 min read

முளைக் கீரை கருத்தக்கார் நொய்யரிசிக் கஞ்சி

தேவையான பொருட்கள்

முளைக் கீரை -  ஒரு கட்டு
கருத்தக்கார் அரிசி  -  100  கிராம்
எள்ளு -  15 கிராம்
கொள்ளு  -  50  கிராம்

செய்முறை

  • முதலில் முளைக்கீரையை அலசி ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • எள்ளு மற்றும் கொள்ளுவை நன்றாக சுத்தம் செய்து வாணலியில் போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • கருத்தக்கார் அரிசியை ஒன்றிரண்டாக உடைத்து நொய்யாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  • ஒரளவுக்கு அரிசி வெந்ததும் நறுக்கி வைத்துள்ள முளைக்கீரை மற்றும் வறுத்து வைத்துள்ள எள்ளு , கொள்ளு ஆகியவற்றைச்  சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு வேக வைத்து கஞ்சி பதம் வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கவும்.

பயன்கள் 

  • இந்தக் கஞ்சி தீராத மலக்கட்டை உடைத்து மலம் எளிதாக வெளியேற்றி  மலச்சிக்கலை போக்க உதவும் ஆரோக்கியமானக் கஞ்சி.
  • மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் கஞ்சி.

படுக்கப் போகும் முன்
 
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
 
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC
கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609, 73737 10080
        Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com