மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வாயு சார்ந்த குறைபாடு மற்றும் மலச்சிக்கலைப் போக்கும் ஆரோக்கிய சூப்

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

News image
Updated On :26 டிசம்பர் 2019, 3:17 am

புதினா சூப்

தேவையான பொருட்கள்

புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
தக்காளி - 2
வெங்காயம் -  2
மிளகுத் தூள் -  ஒரு ஸ்பூன்
வெண்ணெய் - 50  கிராம்
பால் - அரை டம்ளர்
சீரகம்  -  சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
சிறுதானிய மாவு - மூன்று ஸ்பூன்

செய்முறை

  • முதலில் புதினா, கொத்தமல்லித் தழை இரண்டையும் சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில்  நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
  • கொதித்தப் பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு அதனை மூடிவைக்கவும்.
  • பத்து நிமிடத்திற்குப் பிறகு அதில் சீரகம், மிளகுத்தூள், சோம்பு, கொத்தமல்லித் தழை, புதினா ஆகியவற்றையும்  சேர்த்து சிறு தீயில் நன்கு கொதிக்கவிட்டு மூடி வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய்யை போட்டு உருக்கி அதில் சிறுதானிய மாவைக் கலந்து  சற்று வதக்கி அதில் ஒரு தம்ளர் தண்ணீர்  கலந்து இறக்கி விடவும்.
  • மறுபடியும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் சேர்த்து மெல்லிய தீயில் கொதிக்க விடவும்.
  • பின்பு இதனுடன் ஏற்கனவே கொதிக்க வைத்து இறக்கியதை வடிகட்டி சேர்த்து கலக்கி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பலன்கள்

  • இந்த புதினா சூப் ருசியின்மை, வாந்தி மற்றும் உஷ்ணம் சார்ந்த குறைபாடுகளை போக்கும் ஆற்றல் உள்ள சூப்.
  • மேலும் வாயுப் பிரச்சனை மற்றும் தீராத மலச்சிக்கல் குறைபாடு உள்ளவர்களுக்கு அருமருந்தாக செயல்படும் சூப்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.