மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தீராத தலைவலியை குணமாக்க உதவும் அருமருந்து

இந்த சூரணத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர நாள்பட உள்ள தீராத தலைவலி குணமாகும். பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

News image
Updated On :13 மே 2021, 9:19 am


இந்த சூரணத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர நாள்பட உள்ள தீராத தலைவலி குணமாகும். பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

தேவையான பொருள்கள்

தும்பை இலை (காய்ந்தது)  -  50 கிராம்

சீரகம்                          -  10 கிராம்

அதிமதுரம்                -   10 கிராம்

சுக்கு                            -   10 கிராம்

மிளகு                          -   10 கிராம்

திப்பிலி                       -    10 கிராம்

வால் மிளகு               -     10 கிராம்

செய்முறை

முதலில் தேவையான அளவு தும்பை இலையை எடுத்து சுத்தப்படுத்தி மிதமான வெயிலில் நன்கு உலர வைத்து எடுத்துக் கொள்ளவும். சுக்கை மேல்தோல் சீவி  சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

அதிமதுரம், மிளகு, திப்பிலி மற்றும் வால் மிளகு ஆகியவற்றை தேவையான எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். பின்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அரைத்து தூளாக்கிக் கொள்ளவும். தேவைப்பட்டால் சலித்து எடுத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் பல வருடங்களாக துன்பத்தை  கொடுத்துக் கொண்டியிருக்கும் தீராத தலைவலியை குணமாக்க உதவும் அருமருந்தாகும். மேலும் இந்தச் சூரணம்  கண் , காது , மூக்கு மற்றும் தொண்டை தொடர்பான தொல்லைகள் அனைத்தையும் தீர்க்க உதவும் சூரணம்.

மேற்கூறிய குறைபாடுகளால் பல வருடங்களாக துன்பப்படுபவர்கள் இந்த சூரணத்தை தயார்செய்து  காலை மாலை என இருவேளையும் தலா இரண்டு கிராம்  அளவு எடுத்து சாப்பாட்டிற்கு முன்பு சுடுநீரில் கலத்து குடித்து வரவும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்
வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா,

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.