உடலிலுள்ள வாயுவை வெளியேற்ற உதவும் அருமருந்து!

உடம்பிலுள்ள வாயுவையும், உடம்பு வலியையும் குணப்படுத்தும் அருமருந்தாகும் இது.
உடலிலுள்ள வாயுவை வெளியேற்ற உதவும் அருமருந்து!
Published on
Updated on
1 min read


தேவையான பொருட்கள்

சித்தரத்தை.     - 5 கிராம்

சுக்கு                  -  5 கிராம்

மிளகு.               -  5 கிராம்

திப்பிலி.            -  5 கிராம்

அக்கரகாரம்.    -  5  கிராம்

பனைவெல்லம்   -  தேவையான அளவு

மஞ்சள் தூள்.    -  2 சிட்டிகை

செய்முறை

சித்தரத்தை , சுக்கு , மிளகு , திப்பிலி , அக்கரகாரம் ஆகியவற்றை சசுத்தப் படுத்தி  நன்கு இடித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 750 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில்   இடித்து வைத்துள்ள பொருட்களையும் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு பனைவெல்லத்தையும் போட்டு  நன்கு கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதிக்க வைத்து  150 மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி இறக்கி வடிகட்டி  குடிக்கவும்

பயன்கள்

இந்தக் கசாயம்  உடம்பிலுள்ள வாயுவையும், உடம்பு வலியையும் குணப்படுத்த உதவும் அருமருந்தாகும்.

இந்த கசாயத்தை தயார் செய்து காலை , மாலை என இரண்டு வேளையும் அல்லது ஒரு வேளையாகவோ குடித்து வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

-கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com