இந்தியா-சீனா இடையே போர் மூளுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்தார்.
தில்லியில் திங்கள்கிழமை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்து கொண்ட சிவசங்கர் மேனனிடம் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: இந்தியா, சீனா இடையே போர் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை. அந்த நாட்டுடனான பிரச்னைகளை கையாளத் தேவையான 8000 ஆண்டுகால ராஜதந்திரம் நம்மிடம் உள்ளது என்று கருதுகிறேன். கடலோரப் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையை, இருநாடுகளும் கடந்தாண்டு தொடங்கியுள்ளன. இதனால், சீன கப்பல் படையின் பலம் பற்றி நாம் கவலைகொள்ள தேவையில்லை.
சூயஸ் கால்வாய் முதல் மேற்கு பசிபிக் கடல் வரையிலான கடல் வழியை எப்போதும் திறந்து வைத்திருக்கவும், அதன் வழியே தடையற்ற வர்த்தகம் நடைபெறவும் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஆர்வம் கொண்டுள்ளன. அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. அரசிடம் இருந்து மக்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றனர். வானிலையை கூட அரசு தான் நிர்ணயிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். மக்கள் எதிர்பார்க்கும் பாதுகாப்பை அரசுகளால் முழுமையாக பூர்த்திசெய்ய இயலாத சூழ்நிலை உள்ளது என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹிமாசலில் சந்தேகத்திற்குரிய 'பாகிஸ்தான் பலூன்' கண்டெடுப்பு!

யூத் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சினிமாவைக் காப்பாற்ற ஒரே வழி... ரசிகர்களுக்கு மமிதா பைஜு வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

