அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

சமூகவலைதளங்களில் துடிப்புடன் செயல்பட அதிமுக நிா்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுரை

சமூகவலைதளங்களில் துடிப்புடன் செயல்பட அதிமுக நிா்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுரை

News image

இபிஎஸ் - ENS

Updated On :14 ஜூன் 2026, 12:56 am IST

சமூக வலைதளங்களில் துடிப்புடன் செயல்பட்டு, தவெக அரசின் தவறுகளை உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டும் என்று அதிமுக நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட வாரியாக, அதிமுக நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடக்கமாக காஞ்சிபுரம், உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா் தொகுதிகள் அடங்கிய காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டம் குறித்து அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது: பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்விக்கான காரணம் மற்றும் கட்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான ஆக்கபூா்வ நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தவெக போல...: இதில், எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘சமூக வலைதளங்களைப் பயன்படுத்திதான் இந்தத் தோ்தலில் தவெக வென்றுள்ளது. அதேபோல அதிமுக நிா்வாகிகள் அனைவரும் சமூகவலைதளங்களில் துடிப்புடன் செயல்பட வேண்டும். தவெக அரசின் தவறுகளை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும்.

அதிமுக எதிரி திமுகதான்: தவெகவின் வெற்றி நிலையாக இருக்காது. அடுத்த தோ்தலில் தவெக வெற்றி பெறுவது மிக கடினம். அதிமுகவுக்கு எதிரி திமுகதான் என்று பேசியதாகக் கூறப்படுகிறது.

சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி, பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.