ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரும் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவாணின் மனுவுக்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆதர்ஷ் குடியிருப்பு வளாக ஊழல் தொடர்பாக, தம் மீது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என சவாண் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கும், மகாராஷ்டிர அரசுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் திங்கிள்கிழமை சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
அசோக் சவாண் முதல்வராக இருந்தபோது, ஆதர்ஷ் சங்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டார். இதற்குப் பிரதிபலனாக, சவாண் உறவினர்களுக்கு ஆதரஷ் குடியிருப்பு வளாகத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சி.பி.ஐ. தனது பதில் மனுவில் கூறியுள்ளது.
வழக்கின் அடுத்த விசாரணையை 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!

தடுப்புக் காவலில் ஒருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


