கொல்கத்தா பிரசிடென்ஸ் பல்கலைக்கழகத்தை சூறையாடியவர்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அதன் துணை வேந்தர் மாளவிகா சர்க்கார் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஆளுநர் எம்.கே. நாராயணன், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரசிடென்ஸி பல்கலைக்கழகம் மற்ற கல்வி நிறுவனங்களைப் போல் இல்லை. பல்கலைக்கழக
வளாகம் சூறையாடப்பட்டது அதிர்ச்சியை தருகிறது. சமூக விரோதிகள் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக் கொடிகளை ஏந்தி வந்தது தொடர்பாக ஆளுநருக்கு கடிதம் எழுதுவேன். பல்வேறு துறைகளையும் அவர்கள் சூறையாடி விட்டனர். மாணவ, மாணவியர் தாக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்காமல் போலீஸôர் வேடிக்கை பார்த்தனர். நடவடிக்கை எடுக்குமாறு கூறிய போது, எங்களுக்கு உத்தரவு இல்லை எனக்கூறி விட்டனர் என்றார் சர்க்கார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 15: தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!

தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்

குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


