சுற்றுச்சூழல் ரீதியாக மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் குறித்து அறிவதற்காக அமைக்கப்பட்ட காட்கில் குழுவின் அறிக்கை குறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் 3 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை குறித்து ஆய்வு செய்ய காட்கில் கமிட்டி அமைக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் நிபுணர் குழு என அறியப்பட்ட இக்குழு தனது அறிக்கையை 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளித்தது. அந்த மலைத் தொடர் முழுவதும் சுற்றுச் சூழல் ரீதியாக மிகவும் நுட்பமானது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை மீதான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படாததால், அப்பகுதியில் எந்த கட்டுமானம் மற்றும் வளர்ச்சி திட்டங்களையும் மேற்கொள்ள முடியவில்லை என கேரளம் தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தில் முறையிட்டது.
இதை தொடர்ந்து, காட்கில் குழுவின் அறிக்கை அல்லது இது தொடர்பாக அமைத்த வேறு ஏதாவது குழுவின் அறிக்கை குறித்து மத்திய சுற்றுச்சூழல்-வனத் துறை அமைச்சகம் மூன்று வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டுமென தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ஸ்வதந்தர் குமார் உத்தரவிட்டார். மூன்று வார கெடுவுக்குள் அமைச்சகத்தின் முடிவை தீர்ப்பாயத்தின் முன்பு சமர்ப்பிக்க வேண்டுமென அவர் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், காட்கில் கமிட்டியின் அறிக்கை குறித்து இறுதி முடிவெடுக்க அமைக்கப்பட்ட செயற்குழுவின் காலத்தை ஏப்ரல் 15 வரை மத்திய சுற்றுச்சூழல்-வனத் துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. திட்டக்குழு உறுப்பினரும் இஸ்ரோ முன்னாள் தலைவருமான கே.கஸ்தூரிரங்கன் இந்த செயற்குழுவின் தலைவராக உள்ளார்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டுமென்றும் அங்கு எந்த புதிய திட்டமும் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் காட்கில் கமிட்டி அறிக்கையை விரைவில் செயல்படுத்த வேண்டுமெனவும் கோரி, கேரளம், கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆசிய யானை, புலி உள்ளிட்ட பல உயிரினங்களின் வாழ்விடமாக மேற்கு தொடர்ச்சி மலை உள்ளதால் இப்பகுதியை பாதுகாப்பது அவசியம் என அவர்கள் கூறியுள்ளனர்.
காட்கில் குழு, சுற்றுச்சூழல் ரீதியாக மேற்கு தொடர்ச்சி மலையை மூன்று வகையாகப் பிரித்துள்ளது. கோவாவில் எந்த சுரங்க நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் புதிய சுரங்க உரிமம் வழங்கப்படக் கூடாதெனவும் தற்போதுள்ள உரிமங்களை ஐந்து ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கூறியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டுமெனவும் காட்கில் அறிக்கை தெரிவிக்கிறது.
தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தில் இந்த விவகாரம் குறித்த அடுத்த விசாரணை ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு : மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் வளா்ச்சியில்லை: அண்ணாமலை யாரை சொல்கிறார்..?

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


