மக்கள்தொகை மற்றும் வளர்ச்சிக்கான ஆசிய பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் (ஏஎஃப்பிபிசி) தலைவராக மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் ஒருமனதாக வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
பாங்காங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏஎஃப்பிபிசி-ன் 73ஆவது செயற்குழுக் கூட்டத்தில் குரியன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது, ஏஎஃப்பிபிசி-ன் தலைவராக ஜப்பானின் முன்னாள் பிரதமர் யாஸýவோ ஃபுகுடா உள்ளார். அவரைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவராக குரியன் பதவியேற்பார்.
பிராந்திய நாடுகளின் அரசுசாரா அமைப்பான ஏஎஃப்பிபிசி 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் 25 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழு உள்ளது. இந்தக் குழு, பிராந்திய நாடுகளின் பல்வேறு பிரச்னைகள், வளர்ச்சி உள்ளிட்டன குறித்து கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏஎஃப்பிபிசி-ன் செயல்பாடுகளுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.
மக்கள்தொகை மற்றும் வளர்ச்சிக்கான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்துக்கு தலைவராக குரியன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான அரசு சொத்துகளை மீட்டுள்ளேன்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

செங்கல்பட்டில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

ஆப்பனூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

