தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர் தாக்கியதில் இறந்த 5 இந்திய வீரர்களின் சடலங்கள் புது தில்லிக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.
ஐ.நா. அமைதிப்படையின் ஒரு பகுதியாக தெற்கு சூடானில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜோங்லி பகுதியில் ரோந்து சென்ற இந்திய வீரர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் திடீரென தாக்குதல் மேற்கொண்டனர்.
இதில் லெப்டினன்ட் கர்னல் மகிபால் சிங், வீரர்கள் சிவ்குமார் பால், ஹீராலால், பரத் சிங், நந்த் கிஷோர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே ஐ.நா. சிறப்பு விமானம் மூலம் இந்திய வீரர்களின் சடலங்கள் புது தில்லி கொண்டு வரப்பட்டன.
ராணுவ மரியாதையோடு அவர்களின் சடலங்களுக்கு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
வீரர்களின் சடலங்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஆனி மாதப் பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்! எந்தெந்த ராசிக்கு பணவரவு!

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் தொடர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


