கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

தெற்கு சூடானில் கொல்லப்பட்ட5 இந்திய வீரர்கள் சடலங்கள் தில்லி கொண்டு வரப்பட்டன

தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர் தாக்கியதில் இறந்த 5 இந்திய வீரர்களின் சடலங்கள் புது தில்லிக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.

Updated On :12 ஏப்ரல் 2013, 12:41 am IST

தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர் தாக்கியதில் இறந்த 5 இந்திய வீரர்களின் சடலங்கள் புது தில்லிக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.

ஐ.நா. அமைதிப்படையின் ஒரு பகுதியாக தெற்கு சூடானில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜோங்லி பகுதியில் ரோந்து சென்ற இந்திய வீரர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் திடீரென தாக்குதல் மேற்கொண்டனர்.

இதில் லெப்டினன்ட் கர்னல் மகிபால் சிங், வீரர்கள் சிவ்குமார் பால், ஹீராலால், பரத் சிங், நந்த் கிஷோர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே ஐ.நா. சிறப்பு விமானம் மூலம் இந்திய வீரர்களின் சடலங்கள் புது தில்லி கொண்டு வரப்பட்டன.

ராணுவ மரியாதையோடு அவர்களின் சடலங்களுக்கு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

வீரர்களின் சடலங்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.