/

"மம்தா உடல்நிலை திருப்திகரமாக உள்ளது'

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உடல்நிலை திருப்திகரமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2013, 7:05 pm

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உடல்நிலை திருப்திகரமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தனியார் மருத்துவமனை முதன்மை செயல் அலுவலர் கே.டாண்டன் கூறியதாவது: மம்தா பானர்ஜி தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை திருப்திகரமாக உள்ளது. எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன், ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் சில சோதனைகள் செய்ய வேண்டியுள்ளது. டாக்டர் சுப்ரதா மொய்த்ரா தலைமையிலான 10 மருத்துவர் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது என்றார்.

புது தில்லியில் திட்டக்குழு துணைத் தலைவரை சந்திக்கச் சென்ற போது மம்தா பானர்ஜி, நிதி அமைச்சர் அமித் மித்ரா ஆகியோர் இடதுசாரி மாணவர் இயக்கத்தினரால் தாக்கப்பட்டனர்.

இதனால் உடல்நலன் பாதிக்கப்பட்ட மம்தாவுக்கு ஆக்ஸிஜனும் வழங்கப்பட்டது. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மம்தா பானர்ஜிக்கு சோதனை நடைபெற்றது. மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும்படி பரிந்துரைக்கப்பட்டதால் அவர்

கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவரை நலன் விசாரித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் சுப்ரதா முகர்ஜி கூறியதாவது: மம்தா பானர்ஜி நலமாக உள்ளார். எனினும் மூச்சு விடுவதில் அவருக்கு சிரமம் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.