கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மேற்குவங்க ஆளுநர் மீது குடியரசுத் தலைவரிடம் மார்க்சிஸ்ட் புகார்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசுத் தலைவருக்கு மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கடிதம் எழுதி உள்ளார்.

News image
Updated On :12 ஏப்ரல் 2013, 12:42 am IST

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசுத் தலைவருக்கு மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கடிதம் எழுதி உள்ளார்.

புது தில்லியில் முதல்வர் மம்தா பானர்ஜி, நிதி அமைச்சர் அமித் மித்ரா ஆகியோர் இடது சாரி மாணவர் அமைப்புகளால் தாக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கட்சி பொலிட் பீரோ மன்னிப்பு கோர வேண்டும் என மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் கருத்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அக்கட்சியின் பொதுச் செயலர் காரத் எழுதிய கடிதம்: தில்லி சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி பொலிட் பீரோ மன்னிப்பு கோர வேண்டும் என மாநில ஆளுநர் கூறியது நியாயமானதா? இது அரசியல் தலையீடு.

ஆளுநர் எம்.கே. நாராயணன் வெளியிட்ட கருத்து அவரது பதவிக்கு அழகல்ல. தேவையற்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியினர், அலுவலகங்களை இலக்கு வைத்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆளுநரின் கருத்து வன்முறையாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடைபெற்றது என அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை தருகிறது. அரசமைப்பு சட்ட பதவி வகித்து வரும் அவர்,

ஒரு கட்சி ஜனநாயக ரீதியாக செயல்பட தகுதியற்றது எனக் கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது.

குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக செயல்படும் ஆளுநர் எம்.கே.நாராயணன் வெளியிட்ட கருத்து குறித்து ஆய்வு செய்து அவருக்கு நீங்கள் உரிய அறிவுறை வழங்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ளார் காரத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.