தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தும் காவல் துறை: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

காவல் துறையினர் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவது குறித்து விசாரிக்க ஆணையம் அமைப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On :12 ஏப்ரல் 2013, 1:27 am IST

காவல் துறையினர் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவது குறித்து விசாரிக்க ஆணையம் அமைப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் பிகாரிலும், பஞ்சாபிலும் காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கடுமையான விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், காவல்துறை புகார் ஆணையம் அமைப்பது தொடர்பாக 2006-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான நீதிபதி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளதாவது:÷""காவல்துறை புகார் ஆணையம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 7 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அது தொடர்பாக பல மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளன. காவல் துறை அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டு முன்பைவிட பல மடங்கு அதிகரித்து விட்டது. உடனடியாக காவல்துறையை சீரமைக்க வேண்டும். வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள காவலர்கள் அனைவரையும் பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் எல்லாம் ஒரு நொடியில் நிகழ்ந்துவிடாது. காவல் துறை புகார் ஆணையம் அமைப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அந்த ஆணையம் அமைக்கப்பட்டிருந்தால் கூட்டம் நடைபெற்ற விவரங்கள் உள்ளிட்டவை குறித்து அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.