தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஆசிய பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் தலைவராக குரியன் தேர்வு

மக்கள்தொகை மற்றும் வளர்ச்சிக்கான ஆசிய பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் (ஏஎஃப்பிபிசி) தலைவராக மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் ஒருமனதாக வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

Updated On :12 ஏப்ரல் 2013, 12:37 am IST

மக்கள்தொகை மற்றும் வளர்ச்சிக்கான ஆசிய பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் (ஏஎஃப்பிபிசி) தலைவராக மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் ஒருமனதாக வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

பாங்காங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏஎஃப்பிபிசி-ன் 73ஆவது செயற்குழுக் கூட்டத்தில் குரியன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது, ஏஎஃப்பிபிசி-ன் தலைவராக ஜப்பானின் முன்னாள் பிரதமர் யாஸýவோ ஃபுகுடா உள்ளார். அவரைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவராக குரியன் பதவியேற்பார்.

பிராந்திய நாடுகளின் அரசுசாரா அமைப்பான ஏஎஃப்பிபிசி 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் 25 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழு உள்ளது. இந்தக் குழு, பிராந்திய நாடுகளின் பல்வேறு பிரச்னைகள், வளர்ச்சி உள்ளிட்டன குறித்து கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏஎஃப்பிபிசி-ன் செயல்பாடுகளுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பான பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.

மக்கள்தொகை மற்றும் வளர்ச்சிக்கான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்துக்கு தலைவராக குரியன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.