தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதி அப்சல் குருவின் உடலை அளிக்கக் கோரி தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்திருந்தார். இத்தகைய போராட்டத்தில் ஈடுபடுவதற்கு யாசின் மாலிக்கை அனுமதிக்க வேண்டாம் என்பதற்கான சுற்றறிக்கையை தில்லி போலீஸôருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளிக்கும் என தெரிகிறது. இந்த முடிவு வியாழக்கிழமை முதல் (மே 2) அமலுக்கு வருகிறது.
தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு யாசின் மாலிக்குக்கு அனுமதி அளித்தால், தலைநகரில் சட்டம், ஒழுங்கு நிலை பாதிக்கப்படும் என பாதுகாப்புப் படையினர், உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்ததாகத் தெரிகிறது.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) அமைப்பின் தலைவரான மாலிக் சமீபத்தில் பாகிஸ்தான் சென்று அங்கு நிகழ்ந்த ஓர் ஆர்ப்பாட்டத்தில் அப்சல் குருவின் உடலை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இக்கூட்ட மேடையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

