ரூ.2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் கொடுத்து தங்க நாணயம், ஆபரணங்களை வாங்கும்போது ஒரு சதவீதம் வரி செலுத்த வேண்டுமென்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய வரி ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதே போல ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக தங்கத்தை விற்பனை செய்யும்போது விற்பனையாளர் ஒரு சதவீத வரி செலுத்த வேண்டும்.
இப்போது வரை தங்க நாணயங்கள் என்பவை நகைகள் என்ற பிரிவிலும், மொத்த தங்க விற்பனை என்ற பிரிவிலும் வரவில்லை. எனவே அதற்கு வரி விதிக்கப்படாமல் இருந்தது.
இந்த வரிவிதிப்புக்கான நிதி மசோதா 2013 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது. விரைவில் மாநிலங்களவையிலும் நிறைவேற உள்ளது. அதன்பிறகு குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிப்பார்.
இது புதிய வரி அல்ல. 10 கிராம் மற்றும் அதற்கு குறைவான தங்க நாணயங்கள், நகைகள் விற்பனை வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவரை அளிக்கப்பட்ட வரி விலக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

