தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மிசோரமில் நிலச்சரிவு: 10 பேர் சாவு

மிசோரம் மாநிலத்தில் பெய்த பலத்த மழை மற்றும் நிலச்சரிவினால் 5 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

Updated On :11 மே 2013, 5:43 pm

மிசோரம் மாநிலத்தில் பெய்த பலத்த மழை மற்றும் நிலச்சரிவினால் 5 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

தலைநகர் அய்சாலின் லய்புய்ட்லங் பகுதியில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 9 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேரைக் காணவில்லை. இவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அய்சால் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சாலைகளில் தடைகள் ஏற்பட்டுள்ளதால்

போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால், மின்சேவை மற்றும் தொலைத் தொடர்பு சேவை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அசாம்: அசாம் மாநிலம், குவாஹாட்டியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் ஒருவர் காயமடைந்தார். பல வீடுகள் சேதமடைந்தன. குடியிருப்புப் பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.