சத்தீஸ்கர் மாநிலம் கரியாபேண்ட் பகுதியில் நக்சல்களுடன் சனிக்கிழமை நிகழ்ந்த மோதலில் சிஆர்பிஎப் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
இது குறித்து காவல் துறை உயர் அதிகாரி கூறியதாவது: சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நக்சல் தாக்குதல் நடைபெற்றதையடுத்து, கரியாபேண்ட் அருகே உள்ள கல்லாரி கிராம வனப் பகுதியில் சிஆர்பிஎப் 211ஆவது படைப்பிரிவினர் சனிக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
பிற்பகல் 3 மணி அளவில், சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஆயுதம் ஏந்திய நக்சல்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். பதிலுக்கு வீரர்களும் எதிர்த் தாக்குதல் நடத்தியதில் நக்சல்கள் தப்பி ஓடி விட்டனர்.
இந்த மோதலில் இந்தப் படைக்கு தலைமை தாங்கிய துணைத் தளபதி எஸ்.கே. தாஸ் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். உயிரிழந்த அந்த அதிகாரியின் உடலை மீட்பதற்காக கூடுதல் படையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர் என காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
கடந்த மே 25ஆம் தேதி, பஸ்தார் வனப் பகுதியில் யாத்திரையில் ஈடுபட்டிருந்த காங்கிரஸôர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதில், அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பூர்: முதல்வர் ஸ்டாலின் பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்!

விஐடி பல்கலை. நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது எப்படி?

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு உயர்ந்தது?

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

