பாகிஸ்தானைச் சேர்ந்த சிந்து நதி ஆணையக் குழுவினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து 3 நாள் ஆய்வு மேற்கொண்டனர்.
பாகிஸ்தான் சிந்து நதி ஆணையர் ஆசிப் பெய்க் தலைமையிலான குழுவினர் உலர் தடுப்பணை, கிஷன் கங்கா புனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட திட்டப் பணிகளை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் ஜீலம் நதி நீரின் அளவை ஆய்வு செய்த பின் பாகிஸ்தான் புறப்பட்டுச் சென்றனர்.
இதன்தொடர்ச்சியாக இந்திய சிந்துநதி ஆணையக் குழுவினர் வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
சுதந்திரத்துக்கு பின் சிந்து நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில் இரு நாடுகளிடையே தகராறு ஏற்பட்டது. உலக வங்கியின் தலையீட்டின் பேரில் கடந்த 1960-ம் ஆண்டு சிந்து நதிநீர் உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி மொத்தம் உள்ள 6 நதிகளில் கிழக்கு நோக்கி பாயும் ரவி, பியாஸ், சட்லஜ் நதிகளின் நீரை இந்தியாவும், மேற்கு நோக்கி பாயும் சிந்து, ஜீலம், செனாப் நதி நீரை பாகிஸ்தானும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிந்து நதி நீரை பங்கீடு செய்வது தொடர்பாக நெதர்லாந்து நாட்டில் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நடுவர் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான் முறையிட்டுள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பூர்: முதல்வர் ஸ்டாலின் பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்!

விஐடி பல்கலை. நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது எப்படி?

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு உயர்ந்தது?

வால்பாறையில் வேன் கவிழ்ந்ததில் 9 பேர் பலி: குடியரசுத்தலைவர் இரங்கல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

