தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பாகிஸ்தான் சிந்து நதி ஆணைய குழுவினர் காஷ்மீரில் ஆய்வு

பாகிஸ்தானைச் சேர்ந்த சிந்து நதி ஆணையக் குழுவினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து 3 நாள் ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On :2 ஜூன் 2013, 12:17 am IST

பாகிஸ்தானைச் சேர்ந்த சிந்து நதி ஆணையக் குழுவினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து 3 நாள் ஆய்வு மேற்கொண்டனர்.

பாகிஸ்தான் சிந்து நதி ஆணையர் ஆசிப் பெய்க் தலைமையிலான குழுவினர் உலர் தடுப்பணை, கிஷன் கங்கா புனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட திட்டப் பணிகளை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் ஜீலம் நதி நீரின் அளவை ஆய்வு செய்த பின் பாகிஸ்தான் புறப்பட்டுச் சென்றனர்.

இதன்தொடர்ச்சியாக இந்திய சிந்துநதி ஆணையக் குழுவினர் வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.

சுதந்திரத்துக்கு பின் சிந்து நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில் இரு நாடுகளிடையே தகராறு ஏற்பட்டது. உலக வங்கியின் தலையீட்டின் பேரில் கடந்த 1960-ம் ஆண்டு சிந்து நதிநீர் உடன்பாடு ஏற்பட்டது.

அதன்படி மொத்தம் உள்ள 6 நதிகளில் கிழக்கு நோக்கி பாயும் ரவி, பியாஸ், சட்லஜ் நதிகளின் நீரை இந்தியாவும், மேற்கு நோக்கி பாயும் சிந்து, ஜீலம், செனாப் நதி நீரை பாகிஸ்தானும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிந்து நதி நீரை பங்கீடு செய்வது தொடர்பாக நெதர்லாந்து நாட்டில் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நடுவர் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான் முறையிட்டுள்ளன என்பது

குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.