மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஆன்மிக எழுச்சியைத் தட்டி எழுப்பியவர் வேளுக்குடி கிருஷ்ணன்: "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் புகழாரம்

""மக்கள் மத்தியில் ஆன்மிக எழுச்சியைத் தட்டி எழுப்பிய பெருமை வேளுக்குடி கிருஷ்ணனையே சாரும்'' என்று தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் புகழாரம் சூட்டினார்.

News image
Updated On :1 ஜூன் 2013, 9:35 pm

""மக்கள் மத்தியில் ஆன்மிக எழுச்சியைத் தட்டி எழுப்பிய பெருமை வேளுக்குடி கிருஷ்ணனையே சாரும்'' என்று தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் புகழாரம் சூட்டினார்.

தில்லி முத்தமிழ்ப் பேரவையும், தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் பக்தி மற்றும் இசை விழா புது தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக வேளுக்குடி கிருஷ்ணனின் "ஸ்ரீ பகவத் கீதாசாரம்' எனும் பகவத் கீதை ஆன்மிகச் சொற்பொழிவு 3 நாள்களுக்கு தில்லித் தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெறுகிறது.

இந்த விழாவுக்குத் தலைமை ஏற்று "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் ஆற்றிய உரை:

தமிழகத்தின் தலைசிறந்த ஆன்மிக புரவலர்களாக இருந்த சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர், மஞ்சக்குடி ராஜகோபல சாஸ்திரி, பாலகிருஷ்ண சாஸ்திரிகள், எம்பார் விஜயராகவாச்சாரியார், சிவானந்த விஜயலட்சுமி, புலவர் கீரன், வாரியார் சுவாமிகள் போன்றோர்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மிகப் பெரிய ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தினர். நாத்திகவாதம் ஒருபுறம் மிகப் பெரிய அளவில் தலைதூக்கியபோது மக்கள் ஆன்மிக நாட்டத்திலிருந்து விடுபட்டுப் போய்விடாமல் அவர்கள் காத்தனர்.

கடந்த 30 ஆண்டுகளாக ஆன்மிகம் தொய்வு அடைந்த நிலை ஏற்பட்டது. அதிலிருந்து தமிழகத்தை மீட்டு ஆன்மிக எழுச்சியை மக்களிடம் தட்டி எழுப்பிய பெருமை வேளுக்குடி கிருஷ்ணனையே சாரும்.

ஆன்மிக உரைகளை தொலைக்காட்சியிலும் குறுந்தகடு மூலமும் கேட்கும் போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிற்றுண்டி அருந்திக் கொண்டே தொலைக்காட்சியில் ஆன்மிக உரைகளைக் கேட்கும்போது அதில் முழுக் கவனமும் இருக்காது. வேளுக்குடி கிருஷ்ணன் போன்ற ஆன்மிகத்தில் ஊறிய மகான்களின் உரைகளை நேரடியாகக் கேட்கும்போதுதான் அதன் உண்மையான பலன் கிடைக்கும். இதுபோன்ற மகான்களைக் காண்பதும் அவர்களின் ஒலி அலைகளை உள்வாங்கிக் கொள்வதும் நம்மில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

வேளுக்குடியை தில்லிக்கு அழைத்து வந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த முத்தமிழ்ப் பேரவையைப் பாராட்டுகிறேன். அந்த ஆன்மிக பொக்கிஷத்துக்கு ஈடு ஏதும் கிடையாது. ஆன்மிகம், அது எந்த மதமாக இருந்தாலும், அதுதான் இந்தியாவின் உயிர் மூச்சு.

பாமரர்களுக்கும் ஆன்மிக நாட்டம் ஏற்படுத்தும் வேளுக்குடி கிருஷ்ணனின் பணி பல்லாண்டுகள் தொடர வேண்டும்'' என்றார் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.