வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

எதிர்க்கட்சியுடன் டிவி சேனல்கள் கைகோர்ப்பு

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச் செயல்கள் குறித்து கூச்சல் எழுப்புவதற்காக சில உள்ளூர் டிவி சேனல்கள், எதிர்க்கட்சிகளுடன் கைகோத்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

Updated On :22 ஜூன் 2013, 1:54 am IST

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச் செயல்கள் குறித்து கூச்சல் எழுப்புவதற்காக சில உள்ளூர் டிவி சேனல்கள், எதிர்க்கட்சிகளுடன் கைகோத்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்குவங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அசன்சோல் நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது:

எனது அரசு மீது புழுதிவாரித் தூற்றும் பணியில் உள்ளூரைச் சேர்ந்த சில டிவி சேனல்கள் தீவிரமாகச் செயல்படுகின்றன. அவை பாலியல் பலாத்காரம், கொலை போன்ற சம்பவங்கள் தொடர்பாக அரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்ய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகளைப் பயன்படுத்துகின்றன. அவற்றை நாங்கள் சட்டரீதியாகச் சந்திப்போம். என்னையும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் ராயையும் கொல்ல சதி நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கைகோத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.