மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச் செயல்கள் குறித்து கூச்சல் எழுப்புவதற்காக சில உள்ளூர் டிவி சேனல்கள், எதிர்க்கட்சிகளுடன் கைகோத்துள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்குவங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அசன்சோல் நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது:
எனது அரசு மீது புழுதிவாரித் தூற்றும் பணியில் உள்ளூரைச் சேர்ந்த சில டிவி சேனல்கள் தீவிரமாகச் செயல்படுகின்றன. அவை பாலியல் பலாத்காரம், கொலை போன்ற சம்பவங்கள் தொடர்பாக அரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்ய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகளைப் பயன்படுத்துகின்றன. அவற்றை நாங்கள் சட்டரீதியாகச் சந்திப்போம். என்னையும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் ராயையும் கொல்ல சதி நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கைகோத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்

இயலாமையை மறைக்க வெள்ளை அறிக்கை நாடகம்: தங்கம் தென்னரசு






