வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

நிதி முறைகேடு புகார்: முன்னாள் அமைச்சரிடம் மேற்கு வங்க சி.ஐ.டி. போலீஸார் விசாரணை

நிதி முறைகேடு புகார் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாநில அமைச்சர் கெளதம் தேவிடம் மேற்கு வங்க குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர்.

News image
Updated On :22 ஜூன் 2013, 1:12 am IST

நிதி முறைகேடு புகார் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாநில அமைச்சர் கெளதம் தேவிடம் மேற்கு வங்க குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர்.

கொல்கத்தாவில் உள்ள சி.ஐ.டி. போலீஸாரின் தலைமையகத்தில் விசாரணை நடைபெற்றது. இது தொடர்பான மற்ற தகவல்களை தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.

விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கெளதம் தேவ், ""சி.ஐ.டி. போலீஸாரை திருப்திப்படுத்துவது (விசாரணையில் அவர்கள் விரும்பும் பதில்களை கூறுவதன் மூலம்) என் வேலையல்ல. முதல்வர் மம்தா பானர்ஜி, விசாரணை என்ற பெயரில் என்னை இரண்டு மணிநேரம் சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்திருக்க விரும்பினார். அதைத்தான் போலீஸார் செய்தனர்'' என்றார்.

முன்னதாக பெங்கால் கிரீன்ஃபீல்டு வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனைகளில் முறைகேடு நடைபெற்றதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தால்டாலா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பெங்கால் கிரீன்ஃபீல்டு உள்ளிட்ட 8 ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் இணைந்து முந்தைய இடதுசாரி கூட்டணி அரசு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இடதுசாரி கூட்டணியின் தலைவர் பிமன் போஸ் கூறுகையில், ""பொய் குற்றச்சாட்டுகளின் பேரில் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.