/
ஒடிசாவில் அரசுப் பள்ளியில் வகுப்பறையில் குண்டு வெடித்து 19 மாணவர்கள் காயமடைந்தனர்.
இம்மாநிலத்தின் கட்டாக் நகர் அருகே ஆயுத்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திங்கள்கிழமை காலை 9-ஆம் வகுப்பில், மாணவர்களின் வருகை குறித்து ஆசிரியர் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது வகுப்பறையில் திடீரென குண்டுவெடித்தது. இதில் 19 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









