இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட சுஜாதா சிங், அண்டைநாடுகளுடனான நட்புறவை வளர்ப்பதே தனது முதல் பணி எனவும், பாகிஸ்தானுடன் நல்லுறவையே இந்தியா விரும்புகிறது எனவும் தெரிவித்தார்.
புது தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாகிஸ்தானுடன் ஆக்கபூர்வமான நல்லுறவை வளர்ப்பதே இந்தியாவின் கொள்கையாக இருந்து வருகிறது. அதற்கு வன்முறை, பயங்கரவாதம் ஆகியவை இல்லாத சூழல் அமையவேண்டியது கட்டாயமாகிறது.
2011-ல் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. தற்போது பாகிஸ்தானில் புதிய அரசு அமைந்திருக்கிறது. அந்த அரசுடன் விட்ட இடத்திலிருந்து பேச்சுவார்த்தையைத் தொடருவோம்.
அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பதற்கே முக்கியத்தும் கொடுத்து செயல்படவிருக்கிறேன். உலக நாடுகளுடன் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த உறவை வலுப்படுத்துவதே அடுத்த பிரதான நோக்கமாகும்.
இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் ஜெனிவா தீர்மான வரம்பை மீறி மோசமாக நடத்தப்பவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 1999-ல் பாகிஸ்தான் வீரர்களால் கொல்லப்பட்ட கேப்டன் செüரவ் காலியா விவகாரத்தில் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்போது, அவற்றை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்போம். இந்த விவகாரத்தை பாகிஸ்தானிடம் எழுப்புவோம்.
பூடானுடன் நிலவி வரும் சுமுகமான உறவை தொடந்து தக்கவைக்க அந்நாட்டின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அந்நாட்டுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவை நிறுத்தப்பட்டதால் தொழில்நுட்ப ரீதியிலான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை செயலாளராக நான் செல்லும் முதல் நாடு பூடான்தான் என்று சுஜாதா சிங் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல் சாகுபடி ஊக்கத் தொகை விவகாரத்தில் விவசாயிகளை திசைதிருப்ப ஸ்டாலின் முயற்சி: மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

முன்னாள் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் மருத்துவ விடுப்பில் செல்வதாக டிஜிபி-க்கு கடிதம்!
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!
நீதிபதிகளை சிறைப்பிடித்த சம்பவம்: மே.வங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 7 பேரிடம் என்ஐஏ விசாரணை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


