குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு
/

திருமலைக்கு இன்று முதல் பஸ்கள் நிறுத்தம்

திருமலைக்கு வரும் பஸ்கள் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்படுகின்றன.

Updated On :11 ஆகஸ்ட் 2013, 11:53 pm IST

திருமலைக்கு வரும் பஸ்கள் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்படுகின்றன.

தனி தெலங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாள்களுக்கு மேல் நடந்து வரும் போராட்டம் இப்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் திருமலைக்கு பஸ் சேவை நிறுத்தப்படவில்லை. இந்த நிலையில் திருமலைக்கு நள்ளிரவு 12 மணிக்கு மேல் முழு அளவில் பஸ் சேவை நிறுத்தப்பட உள்ளது.

இதுவரை வரலாற்றிலேயே இடம் பெறாத ஒன்றாக திருமலைக்கு செல்லும் பஸ்கள் சேவை நிறுத்தப்படவுள்ளது. இது குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு திருப்பதி போக்குவரத்து கழக மேலாளர் மகேஷ்வர ராவிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை பலன் தரவில்லை. திருமலைக்கு பஸ்களை இயக்க மாட்டோம் என்று போக்குவரத்துத் துறையினர் உறுதியாக தெரிவித்துள்ளனர். மேலும் திங்கள்கிழமை நடைபெற உள்ள போராட்டத்தில் தேவஸ்தான ஊழியர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் தேவஸ்தானம் திருமலைக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் எனத் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.