கள்ள ரூபாய் நோட்டுகளைக் கடத்திய வழக்கில், பிகார் மாநிலத்தின் சம்பரான் மாவட்டத்தில் ஐ.எஸ்.ஐ உளவாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டார்.
பாட்னா மற்றும் முஸாஃபர்பூர் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜமீல் என்கிற புராவை (27) கைது செய்தனர்.
இது குறித்து வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் துணை இயக்குநர் வித்யூத் விகாஸ் கூறியதாவது:
""உத்தரப் பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்திலுள்ள புரானா பஜார் பகுதியைச் சேர்ந்த ஜமீல், சீனாவிலிருந்து புது தில்லிக்கு 30 லட்ச ரூபாய் முக மதிப்பு கொண்ட கள்ள ரூபாய் நோட்டுகளை குரியர் மூலம் கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்தவர்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பைச் சேர்ந்த இக்பால் சானா என்கிற ஹஃபீஸ் உத்தரவுப்படி ஜமீல் கள்ள ரூபாய் நோட்டுகளை உத்தரப் பிரதேசம் மற்றும் புது தில்லியில் புழக்கத்தில் விட்டு வந்தார்.
கள்ள நோட்டுகள் பிடிபட்டதையடுத்து அவர் நேபாளம் சென்று தலைமறைவாக இருந்து வந்தார்'' என்றார் வித்யுத் விகாஸ்.
கைது செய்யப்பட்ட ஜமீலை 7 நாள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அணு ஆயுதக் கொள்கையில் விடாப்பிடியாக ஈரான்! - டிரம்ப் குற்றச்சாட்டு

பிரசாரத்தில் மயங்கி விழுந்த ராமதாஸ்; மருத்துவமனையில் அனுமதி!

ஷுப்மன் கில் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 2-வது வெற்றி!

நெல்லுக்கான ஊக்கத்தொகை விவகாரம்; ஸ்டாலின் குற்றச்சாட்டு உண்மையல்ல: நிர்மலா சீதாராமன்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

