இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உளள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.
Updated on
1 min read

காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உளள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.

இருநாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், அதை பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு பூஞ்ச் பகுதியில் உள்ள நாங்கிடாக்ரியில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், எனினும், இதில் யாருக்கும் காயமேற்படவில்லை என்றும் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர்

தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com