கல்லூரிகளில் விருப்பப்பாடமாக தேசிய மாணவர் படை (என்சிசி) தொடர்பான பாடத்தை சேர்க்கும்படி பல்கலைக்கழகங்களை மத்திய அரசு விரைவில் அறிவுறுத்த உள்ளது. இந்த தகவலை தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் பி.எஸ்.பல்லா சனிக்கிழமை தெரிவித்தார்.
இந்த உத்தேச திட்டம் பற்றி மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்திடம் விரைவில் எடுத்துச்செல்ல உள்ளதாகவும், அதன் பிறகு பல்கலை மானியக்குழு ஏற்பாடு செய்ய உள்ள துணை வேந்தர்கள் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படும் என்றும் பல்லா
தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.