எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மகாராஷ்டிரத்தில் இருந்து மாநிலங்களவைக்கு ரஜினி பாட்டீல் தேர்வு

மகாராஷ்டிரத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக ரஜினி பாட்டீல் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 6:40 pm

தினமணி

மகாராஷ்டிரத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக ரஜினி பாட்டீல் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்தார்.

இதையடுத்து அவர் வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவி காலியானது. இதன் பதவிக்காலம் வரும் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் வரை உள்ளது. இப்பதவிக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மக்களவை பெண் எம்.பி.யான ரஜினி பாட்டீல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

மறைந்த விலாஸ்ராவ் தேஷ்முக் மறைவால் காலியான இடம் என்பதால் தங்கள் தரப்பில் வேட்பாளர் யாரையும் நிறுத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சியான சிவசேனை-பா.ஜ.க. கூட்டணியை முதல்வர் பிருத்விராஜ் சவாண் கேட்டுக் கொண்டார். அதை அக்கட்சிகள் ஏற்றுக்

கொண்டன.

இதையடுத்து, மாநிலங்களவை எம்.பி.யாக ரஜினி பாட்டீல் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.