நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. அறிக்கை, பிரதமர் அலுவலகத்தில் உள்ள சிலரின் வழிகாட்டுதலின்படிதான் திருத்தப்பட்டுள்ளது என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அருண் ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:÷""சி.பி.ஐ. அறிக்கை திருத்தப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து, முக்கிய விஷயத்தை மூடி மறைக்கும் விதமாக அஸ்வனி குமார் ராஜிநாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் அனைத்தும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள யாரோ ஒருவரின் வழிகாட்டுதலின்படிதான் நிகழ்ந்துள்ளது. அதிகாரிகளை பொறுத்தவரை, அவர்களாகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். சிலரின் அறிவுறுத்தலின்படியே அவர்கள் செயல்பட்டுள்ளனர்'' என்றார் அருண் ஜேட்லி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



