நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின்படியே சிபிஐ அறிக்கையில் திருத்தம்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. அறிக்கை, பிரதமர் அலுவலகத்தில் உள்ள சிலரின் வழிகாட்டுதலின்படிதான் திருத்தப்பட்டுள்ளது என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :13 மே 2013, 3:16 am IST

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. அறிக்கை, பிரதமர் அலுவலகத்தில் உள்ள சிலரின் வழிகாட்டுதலின்படிதான் திருத்தப்பட்டுள்ளது என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அருண் ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:÷""சி.பி.ஐ. அறிக்கை திருத்தப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து, முக்கிய விஷயத்தை மூடி மறைக்கும் விதமாக அஸ்வனி குமார் ராஜிநாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் அனைத்தும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள யாரோ ஒருவரின் வழிகாட்டுதலின்படிதான் நிகழ்ந்துள்ளது. அதிகாரிகளை பொறுத்தவரை, அவர்களாகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள். சிலரின் அறிவுறுத்தலின்படியே அவர்கள் செயல்பட்டுள்ளனர்'' என்றார் அருண் ஜேட்லி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.