புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிகார் சட்டப் பேரவை தலைவராக ஐக்கிய ஜனதா தளத்தின் விஜய் சௌத்ரி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிகாரில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகாகூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் பதிவியேற்றார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப் பேரவை கூட்டத்தில், ஐக்கிய ஜனதா கட்சியை சேர்ந்தவரும் நிதிஷ் குமாரின் நெருங்கிய தோழருமான விஜய் சௌத்ரி, பேரவைத் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரை துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், எதிர்கட்சித் தலைவர் பிரேம் குமார், முன்னாள் முதல்வர் ராம் மாஞ்சி, காங்கிரஸ் அமைச்சர் அசோக் சௌத்ரி, பாஜகவின் சஞ்சய் உள்ளிட்ட 11 பேர் முன்மொழிந்தனர்.
விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் சௌத்ரியின் மகனான விஜய் சௌத்ரி முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நிதிஷ்குமாருடன் நெருக்கமானதால் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார்.
பின்னர் ஐக்கிய ஜனதா தளத்தின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட சௌத்ரி, கடந்த 2010 அமைச்சரானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு

பெட்ரோலியப் பொருள்கள் தடையற்ற விநியோகம்: இந்தியன் ஆயில் உறுதி

மாவட்டம் வாரியாக வாக்குப் பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைதியாக முடிந்த வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


