மத்திய அரசின் பணிக்கு தேர்வு செய்யப்பட்டும் பணியாளர்களுக்கு நேர்காணல் நடத்துவதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிக்கான குரூப் சி மற்றும் பி (அரசிதழ் பதிவில்லாத) பதவிகளுக்கு நேர்காணல் நடத்துவதில்லை ஆளும் பாரதீய ஜனதா கட்சி அறிவித்தது.
இந்நிலையில் ஒரு சில பதவிகளுக்கு கட்டாயம் நேர்காணல் நடத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை விரும்பினால், அதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என மத்திய பணியாளர் நலத் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார்.
மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதை தெரிவித்த அமைச்சர், நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது பணியாளர் தெரிவு முறையில் நம்பகதன்மையை அதிகரிக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.