தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

முல்லைப் பெரியாறு: புதிய அணை கட்டுவதே தீர்வு என கேரள முதல்வர் அறிவிப்பு

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் புதிய பாதுகாப்பு அணை கட்டுவேதே ஒரே தீர்வு என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்தார்.

News image
Updated On :9 டிசம்பர் 2015, 3:26 pm

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் புதிய பாதுகாப்பு அணை கட்டுவேதே ஒரே தீர்வு என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்தார்.

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள தமிழக அரசின் பராமரிப்பில் உள்ள முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்குதவற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் தற்போது அணையின் நீர்மட்டம் 141 அடியை நெருங்கியுள்ளது. இந்நிலையில் உபரி நீர் கேரள மாநிலம் வழியாக திறந்து விடப்படுகிறது. முன் அறிவிப்பின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக கேரள அரசு தமிழக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளது.

கேரளாவில், அணையின் கீழே வசிக்கும் ஐந்து மாவட்ட மக்கள் மீது தமிழக அரசு கவலை கொள்ளவில்லை என முதல்வர் உம்மன் சாண்டி, நேற்று பேரவையில் கூறினார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பகிர்வு தொடர்பாக தமிழகத்துடன் 999 ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நூறாண்டு பழைமைவாய்ந்த இந்த அணை அத்தனை ஆண்டுகாலம் பாதுகாப்பாக இருக்கும் என யாரேனும் உறுதியாகக் கூற முடியுமா?

மாநிலங்களுக்கு இடையே நீர் பகிர்வு என்பது யாருக்கு? எவ்வளவு? என்ற பிரச்னை நாடு முழுவதும் இருக்கும் நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரம் வித்தியாசமானது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட்டோம் என நாங்கள் கூறவில்லை. தமிழகத்துக்கு தண்ணீர் - கேரளத்துக்குப் பாதுகாப்பு என்ற நிலைப்பாட்டில் கேரளம் உறுதியாக இருக்கிறது.

புதிய அணை கட்டுவதே இந்த விவகாரத்துக்கான ஒரே தீர்வாக இருக்கும். இதை மத்திய அரசிடமும், பிரதமரிடமும் எடுத்துரைக்க உள்ளோம். இந்த விவகாரத்துக்கு நிர்வாகரீதியாகவும், சட்டரீதியாகவும் தீர்வு காணும் நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது என்றார் உம்மன்சாண்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.