முல்லைப் பெரியாறு விவகாரத்தில் புதிய பாதுகாப்பு அணை கட்டுவேதே ஒரே தீர்வு என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்தார்.
கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள தமிழக அரசின் பராமரிப்பில் உள்ள முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்குதவற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் தற்போது அணையின் நீர்மட்டம் 141 அடியை நெருங்கியுள்ளது. இந்நிலையில் உபரி நீர் கேரள மாநிலம் வழியாக திறந்து விடப்படுகிறது. முன் அறிவிப்பின்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக கேரள அரசு தமிழக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளது.
கேரளாவில், அணையின் கீழே வசிக்கும் ஐந்து மாவட்ட மக்கள் மீது தமிழக அரசு கவலை கொள்ளவில்லை என முதல்வர் உம்மன் சாண்டி, நேற்று பேரவையில் கூறினார்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பகிர்வு தொடர்பாக தமிழகத்துடன் 999 ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நூறாண்டு பழைமைவாய்ந்த இந்த அணை அத்தனை ஆண்டுகாலம் பாதுகாப்பாக இருக்கும் என யாரேனும் உறுதியாகக் கூற முடியுமா?
மாநிலங்களுக்கு இடையே நீர் பகிர்வு என்பது யாருக்கு? எவ்வளவு? என்ற பிரச்னை நாடு முழுவதும் இருக்கும் நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரம் வித்தியாசமானது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட்டோம் என நாங்கள் கூறவில்லை. தமிழகத்துக்கு தண்ணீர் - கேரளத்துக்குப் பாதுகாப்பு என்ற நிலைப்பாட்டில் கேரளம் உறுதியாக இருக்கிறது.
புதிய அணை கட்டுவதே இந்த விவகாரத்துக்கான ஒரே தீர்வாக இருக்கும். இதை மத்திய அரசிடமும், பிரதமரிடமும் எடுத்துரைக்க உள்ளோம். இந்த விவகாரத்துக்கு நிர்வாகரீதியாகவும், சட்டரீதியாகவும் தீர்வு காணும் நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது என்றார் உம்மன்சாண்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்காளா்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தாா் திருச்சி ஆட்சியா்

திருச்சி மண்டல மாவட்டங்களில் பதிவான வாக்குகள் சதவீதம்: தமிழகத்திலேயே கரூரில் அதிகபட்சம்!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைப்பு

விஜய்போல் ஆடை அணிந்து வாக்குச்சாவடிக்கு வந்த இளைஞா்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


