பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இருவர் ராஜஸ்தானில் கைது

இந்தியாவின் முக்கிய இடங்கள் குறித்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இரண்டு நபர்கள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Updated on
1 min read

இந்தியாவின் முக்கிய இடங்கள் குறித்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இரண்டு நபர்கள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்காக உளவு வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, பல நாட்களாக தேடப்பட்டு வந்த தீனா (55) இலம்தீன்(55) ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்தில் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்திய ராணுவ ரகசியங்களை செல்போன் மூலமாக பாகிஸ்தானுக்கு இவர்கள் தெரிவித்து வந்ததாகவும், இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சில நாட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட பிறகே கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com