தில்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தில்லி கிரிக்கெட் சங்க தலைவாரக இருந்த காலத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இச்சம்பவத்தில் ஆரம்பம் முதலே முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதீய ஜனதா எம்.பி. கீர்த்தி ஆசாத் வலியுறுத்தி வருகிறார்.
நிதி அமைச்சருக்கு எதிராக கட்சி எம்.பி. போர்கொடி உயர்த்தி வருவது பாஜகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக பொதுச் செயலாளர் ராம்லால் இன்று காலை கீர்த்தி ஆசாத்தை சந்தித்து பேசினார். அருண் ஜேட்லி விவகாரத்தில், கீர்த்தி ஆசாத் அமைதியாக இருக்குமாறு கட்சி வலியுறுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில் அதை மறுத்து டுவிட் செய்துள்ள கீர்த்தி ஆசாத், கட்சி என்னை அமைதிப்படுத்த முயற்சிப்பதாக கூறுவது வெறும் புரளியே. தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் குறித்த என்னுடைய போராட்டம் தொடரும் என்றார்.
பின்னர் இவ்விவகாரம் குறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் கீர்த்தி ஆசாத் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


