1993ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஷரிஃப் கஃபர் பார்க்கர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்ததாக சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாசிக் ரோட் மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருந்த பார்க்கர் (80) நரம்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு நாசிக் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மரணம் அடைந்ததாக சிறைச்சாலை கண்காணிப்பாளர் ரமேஷ் காம்ளே கூறியுள்ளார்.
2013ம் ஆண்டு மே மாதம் மும்பையில் உள்ள தடா நீதிமன்றத்தில் பார்க்கர் சரண் அடைந்ததாகவும், மும்பை தொடர் குண்டு வெடிப்பில் வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும் வைக்க ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், தீவிரவாதிகள் சந்தித்து சதி திட்டம் தீட்ட ஏற்பாடு செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்று நாசிக் சிறையில் அவர் தண்டனை அனுபவித்து வந்ததாகவும் ரமேஷ் காம்ளே கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.