மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா தொழில்நுட்ப ஊழியர் இறந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கும், ஏர் இந்தியா நிறுவனத்துக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் கடந்த 16 ஆம் தேதி இரவு, தொழில்நுட்ப ஊழியர் ரவி சுப்பிரமணின் என்ஜின் அருகே பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது துணை விமானி என்ஜினை இயக்கியதால் அவர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் ஒரு விபத்து என குறிப்பிடப்பட்டாலும், ஊடகங்களில் வெளியான தகவல்கள் அவ்வாறில்லை என தெரியவருகிறது.
இந்திய அரசியல் சாசனம் வாழ்வதற்கு உரிமை வழங்கியுள்ளது. அதில் பாதுகாப்பாக வாழ்வதற்கான உரிமையும் சேர்க்கப்பட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பிய தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி டி. முருகேசன் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலர், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் இச்சம்பவம் குறித்து இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


