அருணாசல் ஆளுநர் பாஜகவின் ஏஜெண்ட் போல செயல்படுகிறார்: தருண் கோகோய்

அருணாசலப் பிரதேசத்தின் ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா, பாஜகவின் ஏஜெண்ட் போலவும், ஆர்எஸ்எஸ்-ன் பிரசாரக் போலவும் செயல்படுகிறார் என அசாம் முதல்வர் தருண் கோகோய் குற்றம்சாட்டியுள்ளார்.
Updated on
1 min read

அருணாசலப் பிரதேசத்தின் ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா, பாஜகவின் ஏஜெண்ட் போலவும், ஆர்எஸ்எஸ்-ன் பிரசாரக் போலவும் செயல்படுகிறார் என அசாம் முதல்வர் தருண் கோகோய் குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜ்கோவா ஒரு கைக்கூலி போல செயல்படுகிறார். பாஜகவின் ஏஜெண்ட் போலவும், ஆர்.எஸ்.எஸ்.ன் பிரசாரக் போலவும் அவர் நடந்து கொள்கிறார். அவரது மரியாதைக்கு குறைவான செயல்களில் ஈடுபட்டு ஆளுநர் மாளிகையின் கௌரவத்தை கெடுக்கிறார் என்றும், ராஜ் பவனை ஆர்எஸ்எஸ் அலுவலகமாக மாற்றுகிறார் என்றும் கோகோய் சரமாரியாக தனது குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்தார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசை தனது பண பலத்தைக் கொண்டு வீழ்த்த நினைக்கிறது என்றும் கோகோய் கூறியுள்ளார்.

இதே முறையைப் பின்பற்றி அசாமையும் அவர்கள் வீழ்த்த நினைத்தார்கள். ஆனால் அது இயலவில்லை. இதே முறையை அவர்கள் பல்வேறு மாநிலங்களிலும் செய்து வருகிறார்கள் என்று கோகோய் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com