தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லி கிரிக்கெட் சங்க ஊழலில் ஜேட்லி: கீர்த்தி ஆசாத் மௌனம்?

தில்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண் ஜேட்லி இருந்தபோது, முறைகேடு நடைபெற்றதாகக் கூறிய பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத், இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஜேட்லியின் பெயரைக் குறிப்பிடவில்லை.

News image
Updated On :20 டிசம்பர் 2015, 2:53 pm

தில்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண் ஜேட்லி இருந்தபோது, முறைகேடு நடைபெற்றதாகக் கூறிய பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத், இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஜேட்லியின் பெயரைக் குறிப்பிடவில்லை.

தில்லி கிரிக்கெட் சங்க ஊழல் குறித்த விவரங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுவேன் என கூறியிருந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத்.

இந்நிலையில் இன்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் பிஷன்சிங் பேடி, சுரீந்தர் கன்னா ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார் ஆசாத்.

அப்போது, தில்லி கிரிக்கெட் சங்கத்தின் 2011-12ஆம் ஆண்டின் பொதுக்குழுக் கூட்டத்தின் விடியோ பதிவை திரையிட்டார்.

அதில் தலைவர் ஜேட்லியிடம் கீர்த்தி ஆசாத் கேள்வி எழுப்புவதும், அவர் தில்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது குற்றம் ஏதும் இல்லை என்று சொல்வதும் பதிவாகிருந்தது.

பின்னர் கீர்த்தி ஆசாத் கூறுகையில், 'தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பாக, அமலாக்கத் துறை மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை இணைந்து விசாரணை நடத்த வேண்டும்' என்றார்.

எனினும், இந்த விவகாரத்தில் ஜேட்லியின் பெயரை எந்த இடத்திலும் தொடர்புபடுத்தி அவர் கூறவில்லை.

அப்போது, இந்த விவகாரத்தில் ஜேட்லியின் பெயரைக் குறிப்பிடாதது ஏன்? என செய்தியாளர்கள் கேட்டபோது, 'எங்கள் இருவருக்கும் இடையே அரசிலிலும், தனிப்பட்ட முறையிலும் எந்த மோதலும் இல்லை; கொள்கை அளவிலேயே நாங்கள் முரண்படுகிறோம். கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் சண்டையிட்டு வருகிறோம்' என்றார்.

பாஜக தலைவர் அமித் ஷா, கேட்டுக் கொண்டதன் பேரிலேயே ஜேட்லி பெயரை குறிப்பிடவில்லையா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, `அமித் ஷா வீட்டுக்கு காலை சிற்றுண்டிக்கு சென்றேன். அவர் எனக்கு இட்லி வழங்கினார். அது மிகவும் சுவையாக இருந்தது' என்றார்.

நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த ஜேட்லி, கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ஆசாத் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து தில்லி கிரிக்கெட் சங்க விவகாரத்தில் தனது பெயரை சேர்த்ததாக கூறியிருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'இறந்து போன எனது அப்பா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். எங்களுக்குள் குடும்ப உறவு உண்டு' என்றார்  ஆசாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.