விமானம் மூலம் கடத்தல்: ரூ. 80 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

இரு வேறு சம்பவங்களில் விமானம் மூலம் கடத்தப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Updated on
1 min read

இரு வேறு சம்பவங்களில் விமானம் மூலம் கடத்தப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரின் கரிபுர் சர்வதேச விமான நிலையத்தில் சுங்க இலாகாவினர் நடத்திய திடீர் சோதனையின் போது 2.116 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 50 லட்சமாகும். எனினும், இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

இதேபோல கொல்கத்தா விமான நிலையத்தில், பாங்காக்கிலிருந்து வந்த இரு பயணிகளிடம் நடத்திய சோதனையில், அவர்களிடமிருந்து 1.36 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

லவ்ப்ரீத் சிங், தர்மபால் சிங் என்ற அந்த இரு பயணிகளும் கைது செய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் கூறினர்.  பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 34.6 லட்சமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com