கல்வி அதிகாரியின் திடீர் சோதனையின் போது வெறிச்சோடிய பள்ளி: 3 ஆசிரியர்கள் நீக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் இயங்கி வரும் க்ரீன் குத் பத்ரி பெஹ்ரோட் துவக்கப் பள்ளியில், கல்வித் துறை அதிகாரி திடீர் ஆய்வு
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் இயங்கி வரும் க்ரீன் குத் பத்ரி பெஹ்ரோட் துவக்கப் பள்ளியில், கல்வித் துறை அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, பணிக்கு வராத 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பள்ளிகளில் திடீர் ஆய்வுமேற்கொண்ட கல்வி அதிகாரி அல்டாப் ஹுசைன், பள்ளிக்கு வந்த போது, அங்கு ஆசிரியர்கள் இல்லாததால், ஒரு மாணவன் கூட பள்ளிக்கு வராதது தெரிய வந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அதிகாரி, பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com