ஹத்ராஸ்: உத்தரப்பிரதேச மாநிலம் சிகந்தரவு பகுதியில் சென்று கொண்டிருந்த மாநில அரசுப் பேருந்தை ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தி, அதில் இருந்த பயணிகளை மிரட்டி, பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், ஹமிர்புர் சென்று கொண்டிருந்த பேருந்தை 8 பேர் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்தி பேருந்துக்குள் ஏறியது. அதில் இரண்டு பேர் நாட்டுத் துப்பாக்கியை காட்டி மிரட்டி ஓட்டுநரை தாங்கள் குறிப்பிடும் பகுதியில் பேருந்தை நிறுத்துமாறு கூறினர்.
அதே நேரத்தில், மற்ற 6 பேரும் பயணிகளிடம் இருந்து பணம், விலைமதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
இது குறித்து காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோபத்தை, சோகத்தைச் சொல்ல தமிழ் மொழி போல வேறு மொழி கை கொடுக்காது: பேராசிரியா் கு. ஞானசம்பந்தன்

விஷம் குடித்தவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி, போடி, கம்பம் தொகுதிகளில் பெண்கள் வாக்குப்பதிவு சதவீதம் அதிகம்!

வரத்துக் குறைவு: மதுரையில் காய்கறிகளின் விலை உயா்வு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

