டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முடிவு எதுவும் எடுக்காமல் கலைந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்!

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை அமல்படுத்துவதில் மாநிலங்களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்காக தில்லியில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது முடிவு எதுவும் எடுக்கப்படாமல். .

News image
Updated On :25 ஜனவரி 2024, 6:30 am

DIN

புதுதில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை அமல்படுத்துவதில் மாநிலங்களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்காக தில்லியில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கலைந்தது.

நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் மாநிலங்களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதற்காக மாநில பிரதிநிதிகள் கொண்ட  ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அமைந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு, மாநில அரசுகளிடம் ஆலோசனைகள் பெறப்படுகின்றன.

இதில் கிடைக்கும் ஆலோசனைகளை உள்ளடக்கி சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  அந்தவகையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில அரசுகளின் கருத்துக்களும் பெறப்பட்ட பின்னர் அடுத்த கூட்டம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுதுஅவர் , “ஜி.எஸ்.டி. க்கான வரைவு சட்டங்கள் குறித்து இன்றைய கூட்டடத்திலும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், கருத்தொற்றுமை ஏற்படுவதற்கு மேலும் சிறிது காலம் ஆகும். எனவே மீண்டும் டிசம்பர் 11 மற்றும் 12ல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட உள்ளது.

இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.