‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

நம்முடைய கனவுகள் சேர்ந்த புதிய இந்தியாவை உருவாக்குவோம்: ஜனாதிபதி பிரணாப் புத்தாண்டு வாழ்த்து!

நம்முடைய கனவுகள்  ஒருங்கிணைந்த ஓர் இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விடுத்த புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :31 டிசம்பர் 2016, 7:50 pm IST

புதுதில்லி: நம்முடைய கனவுகள்  ஒருங்கிணைந்த ஓர் இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விடுத்த புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

வரக்கூடிய புது வருடம் நமது புகழ்பெற்ற நாட்டிற்கு  வளர்ச்சி மற்றும் வளத்தினை கொண்டு வரட்டும்.

நம்முடைய கனவுகள்  ஒன்றனைந்த ஓர் இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம். 

நாட்டை தூய்மையாகவும் மற்றும் சூழல் மாசு இல்லாத நாடாகவும் உருவாக்க மக்கள் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் என வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.