நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் உணவகங்களில் காலியாகும் பணியிடங்களுக்கான தேர்வின் போது நேர்முக தேர்வு நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தார். மேலும் தேவைப்பட்டால் பணித்திறன் தேர்வு மட்டுமே நடைபெறும் என அறிவித்தார்.
இதன்படி மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 1,352 இடங்களில் இயங்கும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிகளில் காலியாகும் இடங்களுக்கான ஆள்கள் தேர்வின் போது நேர்முக தேர்வு நடத்தப்படமாட்டாது. என மத்திய பணியாளர் நலத்துறை அறிவித்துள்ளது. தேவைப்பட்டால், பணித்திறன் தேர்வு மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.