இந்திய கடற் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீனவப் படகு ஒன்றை இந்திய கடலோரக் காவல் படையினர் இடைமறித்தனர். அதில் இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்ச் மாவட்டம் ஜகவ் கடற்கரைப் பகுதிக்கு பாகிஸ்தான் மீனவப் படகு கொண்டு வரப்பட்டுள்ளது.
சுமார் 40 அடி நீளமுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவப் படகு ஒன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதைப் பார்த்த கடலோரக் காவல்படையினர், அதை வழிமறித்து ஜகவ் கடற்கரைப் பகதிக்குக் கொண்டு வந்தனர்.
அந்த படகில் இருந்த 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வப்போது, இந்திய - பாகிஸ்தான் கடல் எல்லையை தாண்டிச் செல்லும் இரு நாட்டு மீனவர்களும், கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்படுவது வழக்கம்.
பாகிஸ்தான் சிறையில் 440 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போல சுமார் 860 மீனவப் படகுகள் பாகிஸ்தான் வசம் உள்ளது, இதில் பெரும்பாலானது குஜராத் மீனவர்களுடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

