/

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீனவப் படகு: 11 பேர் கைது

இந்திய கடற் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீனவப் படகு ஒன்றை இந்திய கடலோரக் காவல் படையினர் இடைமறித்தனர். அதில் இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :6 பிப்ரவரி 2016, 8:42 am

இந்திய கடற் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீனவப் படகு ஒன்றை இந்திய கடலோரக் காவல் படையினர் இடைமறித்தனர். அதில் இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்ச் மாவட்டம் ஜகவ் கடற்கரைப் பகுதிக்கு பாகிஸ்தான் மீனவப் படகு கொண்டு வரப்பட்டுள்ளது.

சுமார் 40 அடி நீளமுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவப் படகு ஒன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதைப் பார்த்த கடலோரக் காவல்படையினர், அதை வழிமறித்து ஜகவ் கடற்கரைப் பகதிக்குக் கொண்டு வந்தனர்.

அந்த படகில் இருந்த 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வப்போது, இந்திய - பாகிஸ்தான் கடல் எல்லையை தாண்டிச் செல்லும் இரு நாட்டு மீனவர்களும், கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்படுவது வழக்கம்.

பாகிஸ்தான் சிறையில் 440 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போல சுமார் 860 மீனவப் படகுகள் பாகிஸ்தான் வசம் உள்ளது, இதில் பெரும்பாலானது குஜராத் மீனவர்களுடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.